கம்மாபுரம்:பங்குனி மாத உத்திர திருவிழாவையொட்டி, கம்மாபுரம் மேட்டுத்தெரு சித்தி விநாயகர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.விழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (மார்ச்., 21ல்) காலை 8:00 மணியளவில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 5:00 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.