கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயிலில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 01:03
சிவகங்கை: கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, தெப்ப குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
கொல்லங்குடி அருகே அரியாக்குறிச்சி வெட்டுடையார் காளி கோவில் பங்குனி திருவிழா மார்ச் 15 கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி விழாவை முன்னிட்டு பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்க குதிரை உட்பட பல்வேறு வாகனங்களில் தினமும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. விழாவின் பத்தாம் நாளான மார்ச் 24 அன்று காலை 10:00 மணிக்கு கோயில் தெப்பத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெற்றது. தீர்த்த வாரி நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.