பதிவு செய்த நாள்
25
மார்
2019
01:03
கமுதி:கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு, மார்ச் 12 ல், காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
நாள்தோறும் அம்மன் நகர் வலம் வருதல் நடந்தது. பொங்கல் வைத்தல், மாவிளக்கு, காணிக்கை செலுத்தினர். முத்துமாரியம்மன் சூரசம்ஹாரம் செய்தல், அக்னி சட்டி, பால்குடம், கரும்பாலை தொட்டில் நேர்த்திகடன், பூக்குழி இறங்குதல், அன்னபறவை வாகனத்தில் நகர் வலம், மஞ்சள் நீராட்டு, அம்மன் ரதத்தில் ஊர்வலம், வெள்ளிக்குதிரை வாகனத்தில் நகர் வலம்,இரவு அன்னப்பறவை வாகனத்தில் அம்மன் நகர் வலம் நடந்தது.
விழா நிகழ்ச்சியில் 2 ஆயிரம் பக்தர்கள் முளைப்பாரிகளை ஊர்வலமாக கொண்டு சென்று, செட்டி ஊரணியில் கரைத்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கமுதி சத்ரிய நாடார் உறவின் முறை கமிட்டியினர் செய்தனர்.