பதிவு செய்த நாள்
25
மார்
2019
01:03
உடுமலை : உடுமலை, தாராபுரம் ரோடு, ராஜகாளியம்மன் கோவிலில், கடந்த 12ம் தேதி நோன்பு சாட்டப்பட்டது. தொடர்ந்து, 19ம் தேதி, கம்பம் நட்டு, திரளான பக்தர்கள் தீர்த்தம் ஊற்றி வழிபடுகின்றனர்.நேற்று (மார்ச்., 24ல்) முனி விரட்டுதல் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, இன்று (மார்ச்., 25ல்) காலை, திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
தீர்த்தம் மாலை, 6:00 மணிக்கு மாரியம்மன் கோவிலிருந்து, ராஜகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாளை, (மார்ச்., 26ல்)மாலை, 6:00 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான, மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.