பதிவு செய்த நாள்
25
மார்
2019
01:03
கோவை : ராம்நகரில் உள்ள ராமர் கோவிலில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், பாடி மகிழ்வோம் பகவான் நாமம் என்ற இசை நிகழ்ச்சி நடந்தது.இந்நிகழ்ச்சியில், மாவுலீ ஸ்ரீ ஞானேஸ்வர மஹாராஜின் இயற்றிய, ஹரி பாடல்களை கடையநல்லூர் விஷ்வ வரரகரி சமஸ்தான் ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் குழுவினர் பாடினர்.தொடர்ந்து, ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹாராஜ் பேசுகையில், "இந்த கலியுகத்தில் இருந்து, ஆத்மா நல்ல முறையில்
சொர்க்கத்தை அடைய, வழி செய்வது நாம சங்கீர்த்தனம்தான்.
ஞானியான பக்தர்கள், பாவத்தையும், புண்ணியத்தையும் விரும்ப மாட்டார்கள்.கடமையை தவறினால் பாவம். கடமையை சரியாக செய்தால் புண்ணியம். வாழ்க்கையில், எத்தனை புண்ணியங்கள் பண்ணினோமோ, அத்தனை நாள் மட்டுமே சொர்க்கத்தில் இருக்க முடியும். எனவே, பாவம் செய்யக்கூடாது, என்றார்.