காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று தெப்பத் திருவிழா நடந்தது.
காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 13ம் தேதி பஞ்சமூர்த்திகள் ஸ்ரீ விநாயகர். சுப்பிரமணியர். கைலாசநாதர். சுந்தராம்பாள். சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. கடந்த 18ம் தேதி கைலாசநாதர் திருக்கல்யாண உற்சவமும், 20ம் தேதி தேர் திருவிழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு தெப்பத் திருவிழாவில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.