வால்பாறை : வால்பாறை கோவில்களில் பங்குனி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை நடந்தது.
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று முன் தினம் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. பூஜையில் சுமங்கலி பாக்கியம் ஏற்பட பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றிக்கொண்டனர். சங்கடம் போக்கும் சங்கடாஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதே போல் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி நாளான, நேற்று முன் தினம் மாலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.