கண்டாச்சிபுரம்:கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடந்தது.
சோமவாரத்தையொட்டி நேற்று (மார்ச்., 25ல்) காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாம பூஜையும், அதனைத் தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம், கண்டாச்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.