Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அனைத்தும் செய்யும் ஆண்டவர்! பணமிருந்தாலும் பணிவு வேண்டும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குடும்பத்துக்காக செலவழியுங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2019
03:03

உலக வாழ்விற்கு மிகவும் இன்றிமையாதது பொருள். அதை உழைப்பினால் திரட்டும் உரிமையை ஆண்களைப் போல், பெண்களுக்கும் இஸ்லாம் வழங்கியிருக்கிறது. “உங்களில் எவருக்கேனும் அல்லாஹ் செல்வத்தை வழங்கினால், அவர் முதலில் தனக்கும், பின்னர் தன் வீட்டாருக்கும் செலவு செய்யட்டும்,” என்ற நபிமொழியிலுள்ள ‘வீட்டார்’ என்னும் சொல், மனைவி மக்களைக் குறிக்கும். எனவே, ஒவ்வொரு கணவனும் தனக்குத் தேவையான உணவு, உடை, உறைவிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை அடைய முயல்வது போல், தன் மனைவி மக்களையும் அவற்றை அடையச் செய்ய வேண்டும்.ஒருவேளை, மனைவிக்கும் மக்களுக்கும் செலவழிக்கத் தயங்கிக் கஞ்சத்தனம் செய்யும் கணவனின் பொருளிலிருந்து, தனக்கும் தன் மக்களுக்கும் போதிய நியாயமான அளவு பொருளை எடுத்துக்கொள்ளும் உரிமை கூட மனைவிக்கு வழங்கப்பட்டு உள்ளது.நாயகம்(ஸல்) அவர்களின் துணைவியார், அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இதுபற்றி ஒரு தகவல் சொல்லியிருக்கிறார்கள்.‘‘அபூசுப்யான் அவர்களின் மனைவியும், <உத்பாவின் மகளாருமான ஹிந்தா என்பவர், நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் துõதரே! நிச்சயமாக, என் கணவர் அபூசுப்யான் கஞ்சத்தனமுள்ள மனிதராக இருக்கிறார். அவருக்குத்
தெரியாத நிலையில், நான் அவரின் பணத்தில் இருந்து எடுப்பதைத் தவிர வேறு எதுவும் அவர் எனக்கும் குழந்தைகளுக்கும் போதுமாகக் கொடுப்பதில்லை,” என்று முறையிட்டார்.அதற்கு நாயகம்(ஸல்) அவர்கள், “உனக்கும் உன் குழந்தைகளுக்கும்போதுமான பணத்தை நியாயமான அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்,” என்றார்கள்.
இதன்மூலம், ஒரு கணவன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய செலவுகளைத் தவறாமல் செய்ய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகிறது. வீட்டுச்செலவுக்கு இனியாவது போதுமான அளவு பணம் கொடுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar