Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மங்கலம்பேட்டை வரதராஜ பெருமாள் ... விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா துவக்கம் விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் ஆழித்தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஏப்
2019
10:04

திருவாரூர்: திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில் ஆழி தேரோட்டம், ‘ஆருரா, தியாகேசா’ கோஷங்கள் முழங்க, கோலாகலமாக நடந்தது.

Default Image
Next News

திருவாரூர் தியாகராஜசுவாமி கோவில், வரலாற்று சிறப்புமிக்கது; மிகவும் பழமை வாய்ந்தது. ‘இக்கோவில் தோன்றிய காலத்தை கூறமுடியாது’ என, திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.  இக்கோவிலுக்கு பெருமை சேர்ப்பது ஆழித்தேர். இத்தேர், ஆசியாவிலேயே மிகப் பெரியது. அலங்கரிக்கப்பட்ட தேரின் உயரம் 96 அடி; தேரின் எடை, 300 டன்; அலங்கரிக்கப்பட்ட தேரின் எடை 350 டன். முன்புறம், தேரை இழுப்பதுபோல், நான்கு குதிரை சிலைகள் உள்ளன. ஒவ்வொன்றும், 26 அடி நீளம், 11 அடி உயரம் உடையவை. இவை, தமிழர்களின் கலைநயத்தை பறைசாற்றும் விதமாகவும், நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையிலும் அமைந்துள்ளன. தேரை இழுக்கும் வடத்தின் நீளம், 425 அடி, சுற்றளவு, 21 அங்குலம்.  திருச்சி பெல் நிறுவனம், தேரை நவீனமயமாக்கி, ‘ைஹட்ராலிக் பிரேக்’  அமைத்துள்ளது.

ஆழித்தேரோட்டத்தை ஒட்டி, கடந்த 25 ம்தேதி, இரவு 9:00 மணிக்கு, தேருக்கு, தியாகராஜசுவாமி எழுந்தருளிளார். அன்று முதல், சுவாமிக்கு சிறப்புபூஜைகள் நடந்து வந்தன. இன்று காலை, 5:00 மணிக்கு, விநாயகர், சுப்ரமணியர் தேரோட்டம் நடந்தது. காலை 7:15 மணிக்கு, கலெக்டர் ஆனந்த், மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி, எஸ்.பி.துரை, ஆகியோர் வடம்பிடித்து, ஆழித்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள்,‘ ஆரூரா... தியாகேசா’...  கோஷங்கள் முழங்க, தேரை இழுத்தனர். தோரின் பின் சக்கரங்கள் புல்டோசர்களால் தள்ளப்பட்டன. ஆடி அசைந்து, நிலையில் இருந்து புறப்பட்ட ஆழித்தேர், கண்கொள்ள காட்சியாக இருந்தது. ஆழித்தேருக்கு பின், அம்பாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் இழுக்கப்பட்டன. தேரோட்டத்தை ஓட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.         

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனித்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. உத்தரகோசமங்கை வராகி ... மேலும்
 
temple news
 பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த மணப்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகர பகுதியில் உள்ள வைணவத் கோவில்களில், 25 கருட சேவை ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம், ஆந்திரா உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, தினமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar