Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காசிவிசுவநாதர் கோயிலில் இன்று மாசி மகப் பெருவிழா தேரோட்டம்! காசிவிசுவநாதர் கோயிலில் இன்று மாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.2,010 கோடியில் திருப்பதி தேவஸ்தான பட்ஜெட் தீர்மானம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 மார்
2012
10:03

நகரி :திருப்பதி தேவஸ்தானம், 2012 -13ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தேவஸ்தான வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன் முதலாக, 2,010 கோடி ரூபாய்க்கான பட்ஜெட், தேவஸ்தான போர்டின் பட்ஜெட் கூட்டத்தில், பக்தர்களின் மீது சுமையின்றி ஆமோதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான போர்டின் கூட்டம், சேர்மன் பாபிராஜி தலைமையில் நேற்று முன்தினம் திருமலையில் நடந்தது. பின்னர், பாபிராஜி பட்ஜெட் அம்சங்கள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:புது மணமக்களுக்கு தேவஸ்தானம் சார்பில், இலவசமாக நடத்தி வைக்கப்படும், "கல்யாண மஸ்து திருமண நிகழ்ச்சிகளை, இனி திருமலையில் மட்டுமே நடத்த தீர்மானிக்கப்பட்டது. "நித்ய கல்யாணம் என்ற பெயரில் இத்திருமணங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது.தமிழகத்தில் கன்னியாகுமரி, அரியானா மாநிலத்தில் குருஷேத்திரத்தில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்ட, பட்ஜெட்டில், 22 கோடியே 50 லட்ச ரூபாய் ஒதுக்கப்படும். இதுவரையில் அதிகளவு முன்பதிவு செய்துள்ள ஆர்த்தி சேவா டிக்கெட் எண்ணிக்கை குறைக்கப்படும்.தலித், தாழ்த்தப்பட்ட சிற்றூர்களில் கோவில் கட்ட வழங்கப்பட்டு வரும் நிதியை, 5 லட்சத்தில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தப்படும். இதற்கு பட்ஜெட்டில், 12 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். திருமலையில் பக்தர்கள் இலவசமாக பயணம் செய்ய, மேலும் புதிதாக ஏழு (தர்ம ரதம்) பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முடி காணிக்கை செலுத்தும், "கல்யாண கட்டா கட்டடங்களில் பக்தர்களுக்கு மேலும் வசதி ஏற்படுத்தித் தரப்படும். "ஸ்வரணம் திட்டத்தின் கீழ், வாய் பேசாத, காது கேளாத குழந்தைகளுக்கு மருத்துவ உதவி அளிக்க, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், 150 இடங்களில் சீனிவாச கல்யாண உற்சவம் நடத்த அனுமதி அளிக்கப்படும். திருமலையில் "நந்தகம் விடுதி வளாகப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, அங்கு கூடுதல் வசதி ஏற்படுத்தப்படும்.திருப்பதி தேவஸ்தான சொத்துக்கள் மற்றும் பக்தர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்க அனுமதிக்கப்படும். திருமலை கோவிலுக்கு பாதுகாப்பை பலப்படுத்த, "இன்னர் கேரிடார் என்ற பெயரில், திருமலையைச் சுற்றிலும் இரும்பு வேலி அமைக்கவும், அலிபிரியில் பாதுகாப்பை பலப்படுத்த நவீன வசதியுடன் கண்காணிக்கவும் நிதி ஒதுக்கப்படும்.திருப்பதியில் உள்ள ருயா மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த, 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்தில் இருந்து திருப்பதிக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நடைபாதை வழியில், 20 கி.மீட்டருக்கு ஒரு இடத்தில், பக்தர்கள் ஓய்வு எடுக்க கட்டடங்கள் கட்ட ஏற்பாடு செய்யப்படும்.திருமலையில் துப்புரவு மற்றும் தூய்மைக்காக, முன்னுரிமை அடிப்படையில், 58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். நித்ய அன்னபிரசாதம் டிரஸ்டுக்கு நிதி பற்றாக்குறையை போக்க, 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு பாபிராஜி தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
நாமக்கல்: ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் மூன்று டன் பல்வேறு வகையான ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar