பதிவு செய்த நாள்
12
ஏப்
2019
02:04
திருப்பாச்சூர்:திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூர் பகுதியில் உள்ளது, தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரர் சுவாமி கோவில். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான இந்த கோவிலில், 18ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.முன்னதாக, 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. பின், 18ம் தேதி காலை, 9:00 மணிக்கு மேல், 11:00 மணிக்குள், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு, மஹா கும்பாபிஷே கமும், அன்று மாலை, 7:00 மணிக்கு, சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணமும், நடைபெறும்.