தமிழ் புத்தாண்டு (விகாரி வருடம்) ஏப்ரல் 14ம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. உங்கள் நட்சத்திரத்திற்கான பலன் ..
உத்திரம் 2,3,4ம் பாதம்: கடந்த கால குழப்பம் நீங்கும். மனதில் தெளிவு பிறக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறையினர் திறமைக்குரிய நற்பலன் பெறுவர். திடீர் அதிர்ஷ்டத்தால் ஆதாயம் காண்பர். 2019 அக்டோபர் முதல் கடன் வாங்குவதை தவிர்க்கவும். எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல் துறையினர் வளர்ச்சியடைவர். கலைத்துறையினர் தடைகளை முறியடித்து சாதிப்பர்.
அஸ்தம்: எதிர்பார்ப்பைக் குறைப்பது நல்லது. தேவையற்றவர்களுடன் வீண்பேச்சை தவிர்க்கவும். அறிமுகமில்லாதவருடன் பங்கு சேர்ந்து தொழில் தொடங்க வேண்டாம். 2019 அக்டோபர் முதல் குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத்துணையின் மீது நம்பிக்கை அதிகரிக்கும். மனதில் நிம்மதி நிலைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி காண்பீ்ரகள். ஆன்மிக தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள்.
சித்திரை1,2ம் பாதம்: திருமண முயற்சி வெற்றி பெறும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. வாழ்வின் எந்த முடிவையும் தகுந்தவர்களிடம் ஆலோசிப்பது நல்லது. 2019 அக்டோபர் முதல் சொந்த வாழ்வில் உயர்வு, தாழ்வை சந்திப்பீர்கள். குழந்தைகளின் நடவடிக்கை கவலை ஏற்படுத்தலாம். ஆனால் அது தாற்காலிகமானதே. எதிலும் பொறுமை தேவை.