கிள்ளை:குச்சிப்பாளையத்தில் புதுப்பிக்கப்பட்ட காளியம்மன் மற்றும் நவக்கிரக கோவில் கும்பாபிஷேகம் வரும் 17 ம் தேதி நடக்கிறது.கிள்ளை அருகே குச்சிப்பாளையத்தில் காளியம் மன் மற்றும் நவக்கிரக கோவிலை, அப்பகுதியினர் விழா குழு அமைத்து புதுப்பித்தனர்.வரும் 16 ம் தேதி காலை 9.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரத்துடன் இரண்டாம் கால பூஜையும், இரவு 10.00 மணிக்கு பூர்ணஹூதி உள்ளிட்டவைகள் நடக்கிறது. வரும் 17ம் தேதி காலை 7.00 மணிக்கு மூன்றாம் கால யாக சாலை உள்ளிட்ட பூஜைகளுக்கு பின், கடம் புறப்பாடு நடக்கிறது. காலை 10.00 மணிக்கு விமானத்தில் புனித நீர் ஊற்றி கணேச சிவாச்சாரியர் கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கிறார்.