கடலாடி:கடலாடி அருகே ஏ.புனவாசல் ஒத்தவீடு கிராமம் உய்யவந்த அம்மன், பாதாள காளியம்மன் கோயிலில் பொங்கல் விழா நடந்தது. நேற்று (ஏப்., 12ல்) காலை 7:00 மணிக்கு மேல் பால்குடம் ஊர்வலத்தில் நேர்த்திக்கடன் பக்தர்கள் பங்கேற்றனர்.
ஏராளமான பெண்கள் பொங்கலிட்டனர். அன்னதானம் நடந்தது. மாலையில் உலக நன்மைக்கான விளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் நாடகமும் நடந்தது. ஏற்பாடுகளை பூஜகர் செந்தூர்பாண்டி செய்திருந்தார்.