பதிவு செய்த நாள்
14
ஏப்
2019
02:04
சிவகங்கை:சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பிராமண சமாஜம் சார்பில் ராதா மாதவ மற்றும் சீதா ராகவ கல்யாண மகோத்ஸவம் நடைபெற்றது. ஏப்.,12 அன்று மாலை 6:00 மணிக்கு வசந்த மாதவ பூஜை, தியானம், திவ்யநாம சங்கீர்த்தனம், டேலோத்ஸவம் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு சம்பிரதாய உஞ்சவிருத்தியுடன் மகோத்ஸவம் துவங்கியது. தொடர்ந்து காலை 8:30 மணிக்கு விவேகானந்தா பள்ளி தாளாளர் சங்கரன் - சாரதா இல்லத்தில் இருந்து சீர்வரிசை எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.
காலை 9:00 முதல் 11:30 மணிக்கு சீதா ராகவ, ராதா மாதவ விவாகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்ஸவம், பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு ராமபிரான் பிரகார உற்சவம் நடைபெற்றது. மதுரை சோமநாராயணன் குழுவினர் மகோத்ஸவத்தை நடத்தினர். வங்கி அதிகாரி ஓய்வு சந்திரமவுலி, டாக்டர் கல்யாணசுந்தரம் - கீதா, ஆக்ஸ்வர்ட் பள்ளிகளின் தாளாளர் சியாமளா வெங்கடேசன், நல்லாசிரியர் கண்ணப்பன், ராமசாமி, சியாம் சுந்தர் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர். பிராமண சமாஜ தலைவர் சண்முகசுந்தரம், பெருந்தலைவர் ஜெயராமன், துணை தலைவர் ராமசாமி, செயலாளர் லட்சுமணன், பொருளாளர் அனந்தநாராயணன், இணை செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சவுந்திரராஜன், இளைஞரணி பாண்டி என்ற முத்துக்கிருஷ்ணன், செயலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். ஏற்பாடுகளை பிராமண சமாஜத்தினர் செய்திருந்தனர்.