திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2019 11:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு பெருமாள் கருட சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில், தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு, நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, மூலவர் திருவிக்ரமன் விஸ்வரூப தரிசனம், திருப்பாவை சாற்றுமறை, 10:00 மணிக்கு, ஸ்ரீதேவி பூதேவி சமேத தேகளீச பெருமான் கண்ணாடி அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி, சிறப்பு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 5:00 மணிக்கு, வேணுகோபாலன் சன்னதியில் கருடசேவையில் தேகளீசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா நடந்தது. ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் தலைமையில் நடந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.