தமிழ்ப்புத்தாண்டு: ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2019 11:04
ராமேஸ்வரம்: தமிழ் புத்தாண்டு தினத்தில் ராமேஸ்வரம் கோயிலில் இருந்து ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் வீதி உலா வந்தனர். நேற்று தமிழ் புத்தாண்டு தினம் முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
பின் காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடாகி அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடத்தி அங்கு கூடியிருந்த பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்ததும், பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களை நீராடினார்கள். பின் சுவாமி, அம்மன் கோயில் ரதவீதியில் உலா வந்து மீண்டும் கோயிலுக்கு சென்றதும், பகல் 12:௦௦ மணிக்கு சுவாமி சன்னதி அருகில் கோயில் குருக்கள் உதயகுமார் பஞ்சாங்கம் வாசித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் குமரேசன், பேஷ்கார்கள் கமலநாதன், கலைசெல்வம், கண்ணன், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.