Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிள்ளையார்பட்டியில் புத்தாண்டு ... பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சிவன் மீது சூரிய ஒளி பதஞ்சலீஸ்வரர் கோவிலில் சிவன் மீது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது:
எழுத்தின் அளவு:
பரமக்குடியில் சித்திரைத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
12:04

பரமக்குடி: பரமக்குடியில் சித்திரைத் திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து ஏப்., 18 ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார். பரமக்குடி சவுராஷ்ட்ர பிராம்மன மகாஜனங்களுக்கு பாத்தியமான சுந்தரராஜப் பெருமாள் கோயிலில், மதுரை அழகர் கோயிலைப் போன்று, சித்திரைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடப்பது வழக்கம்.இக்கோயிலில் நேற்று காலை 9:30 மணி விழா துவங்கி, 10:00 மணிக்கு கோடைத்திருநாள் எனும் சித்திரைத் திருவிழா பெருமாளுக்கு காப்புக்கட்டுடன் துவங்கியது.

தொடர்ந்து தீர்த்தகுடங்கள், யாகமூர்த்தி ஆடிவீதி வலம் வந்து யாகசாலையை அடைந்தனர். மாலை பெருமாள் புறப்பாடு, சிறப்பு தீபாராதனை நடந்தது.ஏப்., 18 ல் காலை 9:30 மணிக்கு மேல் சுந்தரராஜப்பெருமாள், கருப்பண்ண சாமிக்கு கும்பத்திருமஞ்சனம் நடக்கும். மறுநாள்(ஏப்., 19) அதிகாலை இரவு 2:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, கள்ளழகர் திருக்கோலத்துடன் பூப்பல்லக்கில் எழுந்தருளி 4:00 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கவுள்ளார். தொடர்ந்து தல்லாகுளத்தில் இருந்து, காலை 9:05 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்த படி அழகரை வரவேற்கும் நிகழ்ச்சியும், இரவு காக்கா தோப்பு பெருமாள் கோயிலை அடைவார். அன்று இரவு 7:00 மணிக்கு சுமார் 2 கி.மீ., ஆற்று மணலில் சப்பரத்தை பக்தர்கள் இழுத்து செல்வர்.ஏப்., 20 இரவு விடிய, விடிய தசாவதார நிகழ்ச்சியும், தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் சேவை சாதிக்க உள்ளார். ஏப்., 23 அன்று மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைவார். ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar