ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவிலில், தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்றாம் நாள் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை விழாவில் முக்கிய நிகழ்வாக 17ம் தேதி காலை தேர்திருவிழாவும், 19ம் தேதி மதியம் மட்டையடி உற்சவமும் இரவு தெப்பல் உற்சவமும் நடக்கிறது.