பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
01:04
மயிலம்:மயிலம் முருகர் கோவிலில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.காலை 6:00 மணிக்கு, பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 11:00 மணிக்கு இளநீர், பால் சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் பன்னீர் போன்ற நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 8:00 மணிக்கு உற்சவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகதளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்தார்.