பண்ருட்டி: பண்ருட்டி அருள்ஜோதி நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 2 ம் ஆண்டு லட்சதீப மகோற்சவம் நேற்று நடந்தது.
பண்ருட்டி அருள்ஜோதிநகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், 20ம் ஆண்டு லட்சதீப மகோற்சவம் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 1ம்தேதி துவங்குவது வழக்கம். அதன்படி, நேற்று காலை 8:00 மணிக்கு மூலவர் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனைகள், பூஜைகள் நடந்தது. ஆஞ்சநேயர் வெண்ணெய்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.மாலை 4:00 மணிக்கு லட்சதீப வைபவம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.