ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
ராமநாதபுரம் சொக்கநாதசுவாமி கோயிலில் தமிழ்புத்தாண்டு முன்னிட்டு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இரவு அம்மன் தபசுக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.வழிவிடு முருகன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வெட்டுடையாள் காளியம்மன் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ராமநாதபுரத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவாடானை: ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் தமிழ்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில், தொண்டி ஏகாம்பரேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு தீபாரதனைகள் நடந்தது.திருவாடானை பஸ்ஸ்டாண்டு அருகே உள்ள விநாயகர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.மேலரதவீதியில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.