பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
03:04
திருத்தணி:திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் பக்தர்கள், 48.93 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசிக்கின்றனர். பின், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில், ரொக்கம், தங்கம், வெள்ளி போன்றவை காணிக்கையாக செலுத்துகின்றனர்.அந்த வகையில், 43 நாட்களில், பக்தர்கள் அளித்த காணிக்கையை, நேற்று முன்தினம் (ஏப்., 13ல்), கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் (பொறுப்பு) ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. இதில், 48 லட்சத்து, 93 ஆயிரத்து, 185 ரூபாய் ரொக்கம், 210 கிராம் தங்கம், 15,206 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.