கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் 25ம் ஆண்டு லட்ச தீப விழா நடைபெற்றது.
அதனையொட்டி நேற்று (ஏப்., 14ல்) காலை 7:00 மணிக்கு ஆஞ்சநேயர் மற்றும் அஸ்வத்த குபேர விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு லட்சதீப விழா நடைபெற்றது. இதில் சுற்று வட்டார மக்கள் கலந்து கொண்டனர்.