Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அகலிகையும் ’அம்மா’ தான்! மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன? மலைக் கோயில்களின் மகத்துவம் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
புரிந்த வார்த்தை! புரியாத அர்த்தம்!!
எழுத்தின் அளவு:
புரிந்த வார்த்தை! புரியாத அர்த்தம்!!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
04:04

சோப் தயாரிக்க எண்ணெய் தேவை. எண்ணெய் பட்ட இடத்தை சுத்தம் செய்ய சோப் தேவை. வாழ்வின் முரண்பாடு இது தான்.

நாடக அரங்கில் முன்வரிசையில் அமர விரும்புகிறோம். தியேட்டரில் பின்வரிசையை தேர்வு செய்கிறோம்.வாழ்வில் உங்களது நிலை உறுதியானது அல்ல.

வெள்ளம் வரும் போது எறும்புகளை மீன்கள் தின்னும். வெள்ளம் வடிந்த பின் மீன்களை எறும்புகள் தின்னும். காலத்தின் முடிவுக்காக காத்திருங்கள். கடவுள் அனைவருக்கும் வாய்ப்பு தருவார்.

பிரச்னை என்பது வாழ்வின் முடிவு அல்ல; ஒரு சிறிய வளைவு தான். துன்பம் தற்காலிகமானது; அதைக் கடக்கும் வரை காத்திருங்கள்.  

ஆரம்பத்தில் அக்கறை காட்டுவதை விட, கடைசி காலத்தில் அன்புடன் கவனிப்பது அவசியம். ஆரம்பத்தை விட முடிவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

சரியான மனிதரை தேடுவதை விட, கிடைத்தவரிடம் சரியான உறவு முறையை உருவாக்குவது நல்லது.மனிதனை புரிந்து கொள்ளாதவரை, இணக்கமாக பழக முடியாது.    

மற்றவர் உணர்ச்சிகளுடன் விளையாடாதீர். இதில் ஒருவேளை வென்றாலும், அந்த மனிதரை வாழ்நாள் முழுவதும் இழப்பீர்கள்.  
விட்டுக் கொடுத்தால் வாழ்வில் நிம்மதிக்கு குறைவிருக்காது.

கடவுள் கொடுப்பார்; மன்னிப்பார். ஆனால் மனிதன் பெறுவான், மறந்து விடுவான். நன்றியுணர்வும் மன்னிக்கும் பக்குவமும் தெய்வீக குணங்கள்.

ஒரு பிரச்னையை சமாளிக்க எத்தனை முறை முயற்சித்தீர்கள், எத்தனை முறை முயற்சிக்கவில்லை என இரு தீர்வுகள் மட்டுமே உண்டு. தீர்க்க முடியாத பிரச்னை இல்லை. முயற்சியைப் பொறுத்து முடிவு அமையும்.

பெருமழை வாழ்வின் சவால்களை நினைவுபடுத்துவதால் லேசான மழையைக் கேட்காதீர்கள். நல்ல குடைக்காக பிரார்த்தனை செய்யுங்கள். பிரச்னையைக் கண்டு புலம்பாதீர்கள்; தீர்வுக்கான வழியைத் தேடுங்கள்.

வெற்றியை எட்டிப்பிடிக்க ’எஸ்கலேட்டர்கள்’ (மின்படிக்கட்டு) கிடையாது. படிகள் மட்டுமே உள்ளன. முயற்சி இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது

குறிக்கோளை அடைவதில் பைத்தியமாக இருங்கள். சாதித்ததை எண்ணி குழந்தை போல மகிழ்ச்சி கொள்ளுங்கள். பைத்தியக்காரன், குழந்தை மட்டுமே உலகில் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியின் பூஞ்சா கிராமத்தில் உள்ளது ஸ்ரீ பஞ்ச துர்கா பரமேஸ்வரி கோவில். ... மேலும்
 
temple news
சிக்கபல்லாபூரில் இருந்து நான்கு கி.மீ., துாரத்தில் உள்ளது திப்பேனஹள்ளி கிராமம். இந்த கிராமத்தில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar