Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெரியநாயக்கன்பாளையம் ரங்கநாதர் ... சிங்கம்புணரி, திருப்பத்தூரில் சித்திரை பால்குடம் சிங்கம்புணரி, திருப்பத்தூரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2019
06:04

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் வெள்ளை விநாயகர், நன்மை தரும் 108 விநாயகர், மலையடிவாரம் சீனிவாச பெருமாள், தாடிக்கொம்பு சவுந்திரராஜ பெருமாள், ரயிலடி விநாயகர் கோயில், என்.ஜி.ஓ., காலனி முருகன் கோயிலில் அதிகாலை யில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.  சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

பழநி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பழநி மலைக்கோயில் அதிகாலை 4:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டது.

படிப்பாதையில் திருமுருகபக்த சபா சார்பில், காலையில் படிபூஜை நடந்தது. பக்தர்கள் பால் குடங்கள், தீர்த்தக்காவடி எடுத்து வந்தனர்.

மலையில் ஆனந்தவிநாயகர் சன்னதியில் யாகபூஜை, வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. வெளிப்பிராகாரத்தில் 30 அடி உயரத்தில் சந்தனத்தால் ஓம், வேல் வரைந்து, தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பொதுதரிசனம் வழியில் வெளிப்பிரகாரம் நின்றிருந்த பக்தர்கள் 4 மணி நேரம் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். இரவு தங்கரத புறப்பாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, பழநி திருவள்ளுவர் சாலையில் உள்ள
சாய்பாபா கோயிலில் பழங்கள், காய்கறிகளால் சாய்பாபாவிற்கு அலங்காரம் செய்திருந்தனர். திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில், பட்டத்துவிநாயகர், லட்சுமிநாராயண பெருமாள் கோயில்கள் உள்ளிட்ட இடங்களில்
பக்தர்கள் வழிபட்டனர்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தன.

* குழந்தை வேலப்பர் கோயிலில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் கூடிய பூஜைகள் நடந்தன.

* பெரியநாயக்கன்பட்டி காளியம்மன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜையில் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

தாண்டிக்குடி: தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் சுருளி மற்றும் பல்வேறு பகுதியிலிருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. ராஜ அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

* தாண்டிக்குடி அருகே உள்ள கதவுமலை சிவன்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பாச்சலூர் பகுதியிலிருந்து பக்தர்கள் நடைபயணமாக வந்தனர்.

* கானல்காடு பூதநாச்சியம்மன், பண்ணைக்காடு சுப்பிரமணியசுவாமி, கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர், பூம்பாறை குழந்தை வேலப்பர் குழந்தை கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

கன்னிவாடி: தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. வாலை, சக்தி அம்மனுக்கு, திருமஞ்சன அபிஷேகம்  செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்ய பட்டிருந்தது.
* சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில், விஸ்வரூப தரிசனம் நடந்தது. பால், பன்னீர், இளநீர், தயிர், தேன், உள்ளிட்ட திரவிய அபிஷேகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு ராஜ அலங்காரமும், உற்சவர் சிறப்பு மலர் அலங்காரத்துடனும் பூஜைகள்
நடந்தது.

* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், பழ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

* கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயிலில் கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், செம்பட்டி கோதண்டராமர் கோயிலில், விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar