தேனி: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவிற்கு கம்பம் நடப்பட்டது. தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரை திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் கோயில் வீட்டில் கரகத்துடன் அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார். நேற்று காலை கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து கம்பம் கொண்டுவரப்பட்டு சிறப்பு அபிஷேகம் பரிவட்ட பிரதிஷ்டை செய்து கொடியேற்றம் நடந்தது.
கரகம், மஞ்சள் தீர்த்தம் ஆற்றில் இருந்து எடுத்து வந்து கம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கோயில் செயல் அலுவலர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊர் பிரமுகர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கம்பத்திற்கு தினமும் பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றியும், மாவு பூஜை நடத்துவார்கள். மே 7 ம்தேதி சித்திரை திருவிழா துவங்குகிறது. அம்மன் முத்து பல்லக்கு, புஷ்பபல்லக்கில் வலம் வந்து அருள் பாலிப்பார். மே 10ம் தேதி தேர்திருவிழா நடக்கிறது. மே 13 ம்தேதி தேர்தல் நிலைக்கு வரும். மே 14ல் ஊர் பொங்கலுடன் விழா நிறைவு பெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரம் கண்பாணை, மாவிளக்கு, முடி காணிக்கை, அலகு குத்தியும் நேர்த்திகடன் செலுத்துவர்.