பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
12:04
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மீனாட்சி உடனுறை சொக்கநாதசுவாமி கோயிலில் மீனாட்சி அம்மனுக்கும் சொக்கநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். ராமநாதபுரம் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதசுவாமி கோயில் சித்திரை திருவிழா ஏப்.,5ல் ராணி சேதுபதி நாச்சியார் தேங்காய் தொடல் நிகழ்ச் சியுடன் துவங்கியது. அன்று இரவு வனசங்கரியம்மன் தெய்வம் காளியூட்டம் நடந்தது.ஏப்.,7 ல் அனுக்ஞை, வாசல்விநாயகர் வழிபாடு நடந்தது. ஏப்., 8 ல் காலை 10:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இரவு மீனாட்சி அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார்.
திருவிழா நாட்களில் தினமும் அம்மன் காமாட்சி அலங்காரம், சிவபூஜை அலங்காரம், முருகனுக்கு சக்திவேல் வழங்கும் காட்சி, பிட்டுக்கு மன் சுமந்த காட்சி, திருஞானசம்பந்தருக்கு திருமுலை ஞானப்பால் ஊட்டல் அலங்காரம், அம்மன்தபசு கோலம், தமிழ் வருட பிறப்பில் பஞ்சாங்கம் வாசித்தல், மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக காட்சி, திக் விஜயம் நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் மீனாட்சியம்மனுக்கும், சொக்கநாதசுவாமிக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதனை கோயில் குருக்கள் ஜி.மனோகரன் நடத்தி வைத்தார். பெண்கள் புதிய தாலிக்கயிறு பெற்று கட்டிக் கொண்டனர். பக்தர்கள் மொய் எழுதினார்கள், பின் பகல் 11:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று ஏப்., 18 ல் பொன் ஊஞ்சல், ஏப். 19 ல் தீர்த்தவாரியும், சுவாமி வீதியுலா நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை சரக அலுவலர் எம்.ராமு, விசாரணைதாரர் ஜி.கண்ணன், நிர்வாகசெயலாளர் கே.பழனிவேல்பாண்டியன் செய்திருந்தனர்.