மானாமதுரையில் திருக்கல்யாணம் நாளை ஏப்., 19ல் அழகர் ஆற்றில் இறங்கும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2019 02:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி- சோமநாதர் கோயில் சித்திரை திருவிழாவில் நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மானாமதுரைஆனந்தவல்லி - சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 10ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழா நாட்களின் போது அம்மனும், சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்திற்காக ஆனந்தவல்லி அம்மனும், சோமநாதர் சுவாமி பிரியாவிடையுடனும் திருமண கோலத்தில் சிறப்பு அலங் காரங்களுடன் காலை பொன்னம்பலம் பிள்ளை திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந் தருளினர். பின்னர் சிவாச்சாரியார்கள் ஹோமங்கள் வளர்த்து திருக்கல்யாணத்திற்காக சிறப்பு பூஜைகளை நடத்தினர்.
பின்னர் சுவாமிகள் மாலை மாற்றி கொண்ட பின் 11:45 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பெண்கள் தங்களது தாலி கயிற்றையும் புதிதாக மாற்றி கொண்டனர்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோயிலின் பின்புறம் திருக்கல்யாண விருந்து நடைபெற்றது. மானாமதுரை டி.எஸ்.பி. கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று (ஏப்., 18ல்) காலை 9:00 மணிக்கு தேரோட்டமும், நாளை (ஏப்., 19ல்) காலை 6:00 மணியிலிருந்து 7:05 க்குள் வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நடைபெற உள்ளது.