பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர், ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், நாளை, சித்ரா பவுர்ணமி விழா நடைபெறுகிறது.இதை முன்னிட்டு, அன்று மாலை, 5:00 மணிக்கு, உலக நன்மைக்காக,
1,008 யாக குண்டங்கள் அமைத்து, கலச விளக்கு வேள்வி பூஜை நடக்கவுள்ளது.இதை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர், லட்சுமி பங்காரு அடிகளார் முன்னிலையில், பங்காரு அடிகளார் துவக்கி வைக்கிறார்.
இதற்காக, முக்கோணம், சதுரம், சாய்சதுரம், ஐங்கோணம், அறுங்கோணம், எண்கோணம் உள்ளிட்ட வடிவங்களில், யாக குண்டங்கள் அமைக்கப்படுகின்றன. இப்பணியில், 1,000க்கும் மேற்பட்ட செவ்வாடை பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.ஏராளமான பக்தர்கள் பங்கேற்கும் இந்த வேள்விக்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆதிபராசக்தி மாவட்ட மன்றங்கள் ஒருங்கிணைக்கின்றன.
இன்று (ஏப்., 18ல்) அதிகாலை, ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகத்துடன் பூஜை நடக்கிறது.