பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
காஞ்சிபுரம்: இளையனார்வேலூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பிரம்மோற்சவ விழா, தேரோட்டம் விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த இளையனார்வேலூர் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், பிரம்மோற்சவம் துவங்கி, 10 நாட்கள் நடைபெறும்.அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவம், ஏப்., 10ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில்,
பாலசுப்ரமணிய சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதியுலா வந்தார்.நேற்று முன்தினம் (ஏப்., 17ல்), ஏழாம் நாள் விழா தேரோட்டம், விமரிசையாக நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய பாலசுப்ரமணிய சுவாமி முக்கிய வீதிகள் வழியாக, பவனி வந்தார். நாளை (ஏப்., 19ல்) மாலை, புஷ்ப பல்லக்குடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.