பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
ஊத்துக்கோட்டை: எல்லையம்மன் கோவிலில் இருந்து, சப்த கன்னியர் கோவிலுக்கு, பால்குடம் ஏந்தி அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி, நாளை (ஏப்., 19ல்) நடைபெற உள்ளது.
ஊத்துக்கோட்டை, பூந்தோப்பு பகுதியில் உள்ளது சப்த கன்னியர் கோவில். இங்கு, சித்திரை மாதம், பவுர்ணமி நாளில், பால்குட அபிஷேகம், இந்தாண்டு, நாளை (ஏப்., 19ல்) நடைபெற
உள்ளது.
இதையொட்டி, காலை, 6:00 மணிக்கு கிராம தேவதை செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். இதை தொடர்ந்து, எல்லையம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.பின், எல்லையம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் பால்குடம் சுமந்து சென்று, பூந்தோப்பு பகுதியில் உள்ள சப்த கன்னியருக்கு, 108 பால்குட அபிஷேகம் நடைபெறும்.
மஹா கும்பாபிஷேகம்எறையாமங்கலம்: கடம்பத்தூர் ஒன்றியம், எறையாமங்கலம் கிராமத்தில் உள்ளது அம்பாள் சமேத தர்மலிங்கேஸ்வரர் கோவிலில். நேற்று (ஏப்., 17ல்), மஹா கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, 15ம் தேதி, காலை, 7:00 மணிக்கு, கிராம
தேவதை வழிபாடுடன் மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கியது.மஹா கும்பாபிஷேக நாளான நேற்று (ஏப்., 17ல்), காலை, 7:00 மணிக்கு, திவ்ய ஹோமமும் மஹா பூர்ணாஹூதி யும், தொடர்ந்து கலசங்கள் புறப்பாடும் நடந்தது. பின், காலை, 9:15 மணிக்கு மேல், 10:45 மணிக்குள், மஹா கும்பாபிஷேகமும், தொடர்ந்து பகல், 11:30 மணிக்கு, மஹா அபிஷேகமும் நடந்தது.