பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
செஞ்சி:நெகனூர் பொன்னிபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
செஞ்சி தாலுகா நெகனூர் கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் உடனுறைபொன்னிபுரீஸ்வரர், சப்தமாதாக்கள் மற்றும் நவக்கிரக கோவில்களில் திருப்பணிகள் செய்து நேற்று (ஏப்., 17ல்) மகா
கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு 16ம் தேதி காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் நடந்தது. அன்று மாலை கோபூஜை, வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை,
இரவு அஷ்டபந்தனம் சாற்றுதல், சாமி நிலை நிறுத்துதலும் நடந்தன. நேற்று (ஏப்., 17ல்) காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, 8 மணிக்கு மகா அபிஷேகம், 9 மணிக்கு மகா
பூர்ணாஹூதி, 9.30 மணிக்கு கடம் புறப்பாடும் 10.10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது. 11 மணிக்கு மகா அலங்காரமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு வாணவேடிக்கையுடன் சாமி வீதி உலா நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.