விழுப்புரம் எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலய தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2019 02:04
விழுப்புரம்:எரிச்சனாம்பாளையம் மன்னார் சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நாளை (19-ம் தேதி) நடக்கிறது.
விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி எரிச்சனாம்பாளையம் மன்னார்சுவாமி பச்சைவாழி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா உற்சவம் கடந்த 10-ம் தேதி வள்ளி தெய்வானை வீதியுலா உற்சவத்துடன் துவங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் ஈஸ்வரன், ஈஸ்வரி, பச்சை வாழியம்மன், வள்ளி, தெய்வானை, முருகன் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா உற்சவம் நடத்தப்பட்டது. 11-ம் நாளான நாளை 19-ம் தேதி பகல் 12 மணிக்கு வள்ளி தெய்வானை முருகனுக்கு திருக்கல்யாண உற்சவமும், பகல் 2 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்கிறது. அடுத்தநாள் 20-ம் தேதி நிறைமதி காப்புகளைதல் உற்சவம் நடத்தப்படுகிறது.விழாவிற்கான வைபவங்களை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.