Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் ... ஓமலூர் குஞ்சு மாரியம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2019
02:04

வீரபாண்டி: சேலம், உத்தமசோழபுரம், கரபுரநாதர் கோவிலில், சித்திரை திருவிழா முகூர்த்த கம்பம், கடந்த, 4ல் நடப்பட்டது. நேற்று (ஏப்., 17ல்) காலை, கரபுரநாதர், பெரியநாயகி அம்மன், கொடி மரத்துக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து, மலர் மாலைகளால் அலங்கரித்து, சிவாச்சாரி யார்கள், கம்பத்தில் கொடியை ஏற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

மாலை, பிரதோஷ விழாவில், பெரியநாயகி சமேத கரபுரநாதர், காளை வாகனத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து, பக்தர்கள் கரபுரநாதரை தோளில் சுமந்து, சிவ, சிவ கோஷம் முழங்க, கோவிலை வலம் வந்தனர்.

இன்று (ஏப்., 18ல்) மாலை, பெரியநாயகி, கரபுரநாதருக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. நாளை, தேரோட்டம் நடக்கும். ஏப்., 21 இரவு சப்தாவரணம், 22 மஞ்சள் நீராட்டு வைபவத்துடன், திருவிழா நிறைவடையும்.

சித்ரா பவுர்ணமி விழா இன்று (ஏப்., 18ல்) தொடக்கம்: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், சத்குரு ஞானந்தகிரி சுவாமிகள் ஆசிரமத்தில், 85ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, இன்று (ஏப்., 18ல்) மாலை, 3:00 மணிக்கு, பஜனை பாடல்களுடன் தொடங்கும். ஆசிரம தலைவர் வெங்கடாஜலம் தலைமை வகிப்பார். இரவு, 7:00 மணிக்கு, ஞானந்தகிரி சுவாமிகள், பாதுகைக்கு அபிஷேக ஆராதனை, திருவாசகம் பாராயணத்துடன் சித்ரா பவுர்ணமி விழா நடக்கும்.

நாளை (ஏப்., 19ல்) காலை, சாதுக்கள் தலைமையில் மகேஸ்வர பூஜை, மதியம் அன்னதானம், இரவு, சிறப்பு சொற்பொழிவு, இன்றைய சூழலில் நமக்கு வழிகாட்டியாக இருப்பது கம்ப ராமாயணமா, மகாபாரதமா எனும் தலைப்பில் பட்டிமன்றம் நடக்கும். ஏப்., 20 மாலை, 6:00 மணிக்கு, உலக சமுதாய சேவா சங்க திருச்சி பேராசிரியை அமுதா ராமானுஜம், சொல் எனும் மந்திரம் தலைப்பில் பேசவுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் அஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோயிலில் ... மேலும்
 
temple news
சங்கடஹர சதுர்த்தியையொட்டி, கோவில்களில் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விருத்தாசலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநியில் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சிவகங்கைச் சீமை செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டது, இதில் பழநி ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar