பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
02:04
நாமக்கல்: ராசிபுரம் கைலாசநாதர், பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருத்தேர் விழா கோலாகலமாக நடக்கிறது.
ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், சித்திரை திருத்தேர் விழா, கடந்த, 10ல் கொடியேற்றத் துடன் துவங்கியது. தினமும் மாலை, 6:00 மணிக்கு மயில், பூத, சிம்மம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் தர்மசம்வர்த்தினியுடன் கைலாசநாதர் வீதி உலாவில் எழுந்தருளினார். இன்று (ஏப்., 18ல்) மாலை, 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், நாளை (ஏப்., 19ல்) காலை, 5:00 மணிக்கு அபிஷேகம், 7:30 மணிக்கு சுவாமி அம்பாள் ரதத்திற்கு எழுந்தருளல், மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 23ல் சப்தாபரணம், 24ல் நடராஜர் அபிஷேகம் மற்றும் வசந்தோற்சவம் நடக்கிறது.
பொன்வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த, 11ல் துவங்கிய திருத்தேர்விழாவை முன்னிட்டு, தினமும் மாலை, 6:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரங்களில் கருட, அனுமந்தன், அன்ன வாகனம், சிம்மம், கெஜலட்சுமி, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங் களில், சுவாமி எழுந்தருளுகிறார். இன்று (ஏப்., 18ல்), திருக்கல்யாண சேவை, 21 காலை, 5:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 23ல் தீர்த்த வாரி, இரவு சத்தாபரணம், 24ல் வசந்தோற்சவம் நடக்கிறது.
ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜகோபால், ஆய்வர் செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.