பதிவு செய்த நாள்
18
ஏப்
2019
03:04
குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த மோடமங்கலம், வேப்பங்காடு பகுதியில் கற்பக விநாயகர், கோட்டை முனியப்பன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த, 14ல் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. காலை, 9:30 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க புண்ணிய தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. கடந்த, 15ல் சிற்பங்கள், கோபுர கலசங்களுக்கு அபிஷேக, பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (ஏப்., 16ல்) காலை, 8:00 மணியளவில் முளைப்பாரி எடுத்து வரப்பட்டது. மாலை, 5:00 மணிக்கு யாக சாலை பூஜை நடைபெற்றது. நேற்று (ஏப்., 17ல்) காலை, 5:30 மணியளவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து கோமாதா பூஜை, அலங்கார பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.