மாரியம்மன் கோவில் திருவிழா: தீர்த்தக்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2019 01:04
கிருஷ்ணராயபுரம்: புணவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு சென்றனர். கிருஷ்ணராயபுரம் அடுத்த புணவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா, சில நாட்களுக்கு முன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக் குடம் எடுத்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். நாளை இரவு கரகம் பாலித்தல், மாவிளக்கு பூஜை, வாண வேடிக்கை நடக்கிறது.