பதிவு செய்த நாள்
20
ஏப்
2019
01:04
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்த தபோவனத்தில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு சத்குருநாதருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.விழாவில் காலை 5:00 மணிக்கு, அதிஷ்டானத்தில் மகன்யாச ஏகாதச ருத்ர ஜபம், மூர்த்திகள் அபிஷேகம், 6:00 மணிக்கு, கணபதி ஹோமம், 7:00 மணிக்கு, பாதபூஜை, 8:00 மணிக்கு அதிஷ்டானத்தில் விசஷே அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.மாலை 5:00 மணிக்கு, மணிமண்டபத்தில் சத்குரு நாதருக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, இரவு 8:00 மணிக்கு, சென்னை சங்கர் பாகவதரின் நாமசங்கீர்த்தனம் நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஞானானந்த தபோவன செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.இன்று மதியம் 2:30 மணிக்கு, சென்னை பத்மா சஷோத்ரி பள்ளி மாணவர்களின் நாமசங்கீர்த்தனம், இரவு 7:30 மணிக்கு, ஹைதராபாத் ஈஸ்வரி பிரசாத் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் நடக்கிறது.