பதிவு செய்த நாள்
21
ஏப்
2019
01:04
திருவொற்றியூர் : சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கடும்பாடி அம்மன் கோவில், அக்னி வசந்த மஹோ உற்சவ விழாவில், பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, கடும்பாடி அம்மன் கோவில், பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அக்னி வசந்த மஹோற்சவம் நடைபெறும். நேற்று முன்தினம் இரவு, இந்த உற்சவம் நடந்தது. காலை, பால்குடம் ஊர்வலம், மாலை, வடிவுடையம்மன் கோவிலில் இருந்து, அம்மன் அலங்கரிக்கப்பட்டு, வீதி உலா அழைத்து வரப்பட்டார். உடன், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து அணிவகுத்தனர். கோவிலின் முன் ஏற்படுத்தப்பட்டிருந்த, அக்னி குண்டத்தில், மருளாடியபடியாக, ஆவேசத்துடன் தீ மிதித்து, பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். கூடியிருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், ஓம் சக்தி, பராசக்தி என, பக்தி பரவசத்துடன் முழங்கினர்.