சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை நடந்தது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவம், 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவிலில், ஆண்டு தோறும் சித்திரை மாதம், 10 நாள் பிரம்மோற்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவில் இன்று (21ம் தேதி) கருட சேவை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 23ம் தேதி, நாச்சியார் கோலத்தில், பல்லக்கு சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 25ம் தேதி, தேர் திருவிழா நடக்கிறது.