பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
02:04
மாமல்லபுரம்: மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோவில் வழிபாட்டிற்கு, 1,008 சகஸ் ரநாம நாமாவளி ஆரம் நன்கொடை அளிக்கப்பட்டது.மாமல்லபுரம், ஸ்தல சயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவில்.
இக்கோவில் இறைவன், நிலத்தில் படுத்து, பக்தர்களுக்கு அருள் பாலித்து, நிலம் சார்ந்த தோஷ பரிகார கோவிலாக விளங்குகிறது.பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களின்போது, சுவாமிக்கு அழகிய ஆபரணம் சாற்றி, அலங் கரித்து வழிபடுகின்றனர். தின வழிபாட்டில், சகஸ்ரநாம நாமாவளி உச்சரித்து, அர்ச்சிக்கும் நிலையில், 1,008 விஷ்ணு சகஸ்ரநாம ஆரத்தை, பக்த குழுவினர், நேற்று (ஏப்., 21ல்), நன்கொடை அளித்தனர். தனித்தனி செம்பு தகட்டிற்கு, தங்க முலாமிட்டு, அமெரிக்க டயமண்ட் கற்கள் பதித்து, மகர கண்டிகை ஆரத்துடன் இணைத்து, 7 அடி நீளத்தில் இணைத்து, ஒவ்வொன்றிலும், சகஸ்ர நாமாவளி என, 1,008 கீர்த்தனைகள் பொறிக்கப்பட்டுள்ளது.ஸ்தலசயன பெருமாள், சித்திரை விசாக நட்சத்திர நாளில், பிரதிஷ்டை செய்த நிலையில், இந்நாளான நேற்று (ஏப்., 21ல்), மூலவருக்கு, புதிய ஆரம் சாற்றி, சிறப்பு வழிபாடு நடந்தது.