Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திண்டிவனம் சந்திரமவுலீஸ்வரர் ... வாழப்பாடி குழந்தை வரம் வேண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் 3 கோவில்களில் தீர்த்தக்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2019
02:04

சேலம்: மாவட்டத்திலுள்ள, மூன்று கோவில்களில், இன்று (ஏப்., 22ல்) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம், நேற்று (ஏப்., 21ல்) நடந்தது.

கல்பாரப்பட்டி, அண்ணமார் சுவாமி கோவிலில், புதிதாக யானை, குதிரை, சேனை ஆகியவற்றை அமைத்து, புதுப்பித்து கோவில் கட்டியுள்ளனர். அதையொட்டி, நேற்று (ஏப்., 21ல்) காலை, கணபதி யாகத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. வேட்டைக்காரன் கோவில் வீட்டிலிருந்து, ஏராளமான பக்தர்கள், தீர்த்தக்குடம் சுமந்து, ஊர்வலமாக, அண்ண மார் கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, அங்கு, புனிதநீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. இன்று (ஏப்., 22ல்) காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கும். தொடர்ந்து, சுவாமிகளுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்.

புதூரில்...: மேட்டூர், நவப்பட்டி ஊராட்சி, புதூரில், ராஜகணபதி, வேப்பிலைக்காரி, சக்தி மாரியம்மன் கோவில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. அதை யொட்டி, நேற்று (ஏப்., 21ல்) காலை, திரளான பக்தர்கள், செக்கானூர் காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.

பெரியமுத்தியம்பட்டியில்...: கொங்கணாபுரம் அருகே, பெரியமுத்தியம்பட்டி, பெரியாண்டிச்சி, புடவைக்காரி ஐயம்மா அம்மன் சுவாமிகள் ஆலயம் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அதன் ஆலயத்திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம், இன்று (ஏப்., 22ல்)நடக்கவுள்ளது. அதில், சுவாமிகள் மீது புனிதநீர் தெளிக்க, ஏராளமான பக்தர்கள், பூலாம்பட்டி காவிரியாற்றிலிருந்து, தீர்த்தக்குடங்களை எடுத்து, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து, கோவிலை அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar