பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
03:04
கரூர்: க.பரமத்தி அருகே, புன்னம் பசுபதிபாளையம் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா, காப்பு கட்டி, கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் (ஏப்., 21ல்) வீடு, வீடாக சென்று, படி விளையாட்டு பூஜை நடந்தது. இதனையொட்டி அம்மனை அலங்கரித்து வீடு வீடாக எடுத்துச் சென்றனர். அங்கு பக்தர்களின் வீட்டு வாசல்களில் பூஜை செய்து சிறப்பு வழிபாடு
செய்யப்பட்டது. நேற்று (ஏப்., 21ல்) பொங்கல் வைத்து, வடிசோறு பூஜை நடந்தது. இன்று
(ஏப்., 22ல்), கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று, பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (ஏப்., 23ல்)அம்மனுக்கு அபிஷேகம், மாவிளக்கு பூஜை, கிடாவெட்டு, முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகியவை நடக்கின்றன.