நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது.
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி சிறப்பு யாகம் நடந்தது. யாகம் முடிந்து பூலோக நாதருக்கு சங்காபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் புவனாம்பிகை சமேதராய் பூலோக நாதர் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.