பதிவு செய்த நாள்
22
ஏப்
2019
04:04
மேட்டுப்பாளையம்:மருதூரில் உள்ள ஜெயமங்கள ஆஞ்சநேயருக்கு, 1,008 பழங்களில் அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டன.காரமடையை அடுத்த மருதூரில் மிகப் பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது.
கருவறையில் ராம பிரானின் பக்தராக கரம் குவித்து வணங்கும் பக்த ஆஞ்சநேயராக காட்சி தருகிறார். இங்கு ஒவ்வொரு தமிழ் மாத முதல் சனிக்கிழமை விழா வெகு விமரிசையாக
நடைபெறும்.
சித்திரை மாதம் முதல் சனிக்கிழமை சிறப்பு பூஜையையொட்டி, அனுமந்தராய சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, சப்போட்டா, பலாப்பழம் உள்ளிட்ட, 1,008 பழங்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலையிலிருந்து மதியம் வரை மூன்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விழாவில் புலவர் அரங்கசாமியின் வில்லி பாரதம் தொடர் சொற்பொழிவும், முத்துக்கல்லூர், சுண்டக்கரைப்புதூர் உட்பட பல்வேறு குழுவினரின் பக்தி பஜனைகளும் நடந்தன. இதில்
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து பக்தர்கள் வந்து
ஆஞ்சநேயரை வழிபட்டனர். கோவில் கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.