மதுரை : மதுரையில் கிறிஸ்தவ சர்ச்சுகளில் ஈஸ்டர் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் (ஏப்., 20ல்) இரவு 11:00 மணிக்கு திருப்பலி நடந்தது.
சர்ச்சுகளில் முன்னதாக மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்ட பின் ஆளுயர மெழுகுவர்த்தியில் பாதிரியார் ஒளியேற்றி, கிறிஸ்துவின் ஒளி இதோ, எனக்கூற மக்கள் தாங்கள் கொண்டு வந்த மெழுகுவர்த்திகளை பாதிரியார் ஏற்றிய பெரிய மெழுகுவர்த்தியில் பற்ற வைத்து ஒளி ஏற்றினர். பின் விளக்குகள் எரியவிடப்பட்டன. நேற்று (ஏப்., 21ல்) அதிகாலை 2:00 மணி வரை நடந்த திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூய மரியன்னை சர்ச்சில் ஆர்ச் பிஷப் அந்தோணி பாப்புசாமி, ஞான ஒளிவுபுரம் புனித வளனார் சர்ச்சில் பாதிரியார் செபாஸ்டின், உதவி பாதிரியார் ஆரோக்கியராஜ், திருத்தொண்டர் ஜேம்ஸ் கலந்து கொண்டனர். பாதிரியார் அந்தோணி சேவியர் மறையுரை நிகழ்த்தினார். அண்ணாநகர் வேளாங்கண்ணி சர்ச், புதூர் லூர்து அன்னை சர்ச், டவுன் ஹால் ரோடு ரோசரி சர்ச்சில் நடந்த ஈஸ்டர் திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.