பதிவு செய்த நாள்
07
மார்
2012
11:03
நத்தம் :நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவில், பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிப்பட்டனர். கரந்தன்மலையில் உள்ள கன்னிமார் கோயில் அருவியிலிருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து சந்தனக்கருப்புச் சுவாமிக் கோயிலில் அர்ச்சனை செய்தனர். பின் மாரியம்மன் கோயிலுக்கு அழைத்துச் செல் லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகமும், அலங்காரமும், அர்ச்சனையும் செய்து காப்புக்கட்டினர். அன்று முதல் ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய் ஆகிய கிழமைகளில் அம்மன் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிம்மம், அன்னம், கேடயம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வந்தார். பக்தர்கள் பால் குடம், மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்தும் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று அக்னிசட்டி, காவடி எடுத்தும் வேல், அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கினர். ஏற்பாடுகளை தக்கார் அறிவழகன், நிர்வாக அலுவலர் செந்தில்குமார், கோயில் பரம்பரை டிரஸ்டி பூசாரிகள் சொக்கையா, சுப்புராசு,சின்னராசு, நடராசு ஆகியோர் செய்திருந்தனர்.