மூங்கில்துறைப்பட்டு:மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள புதுப்பட்டு சொர்ணாம்பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதுப்பட்டில் ஆண்டு தோரும் சொர்ணாம்பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுவது வழக்கம்.அதே போன்று நேற்று (ஏப்., 22ல்)காலை நடந்த உற்சப விழாவிற்கு கணபதி ஹோமம், ருத்திர ஹோமம், சுதர்சனம் ஆகியஹோமங்கள் நடந்தது.காலை 9 மணியளவில் சுவாமிக்கு, சீர்வரிசை எடுத்துக் கொண்டு பொதுமக்கள் ஊர்வலமாக வந்தனர். காலை 10 மணிக்கு அபிஷே, ஆராதனை செய்து, காலை 10.30 மணிக்கு சொர்ணாம் பிகை சமதே சோமேஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடத்திவைக்கப்பட்டது.
அதன் பின் சுவாமிக்கு தீபாரதனை நடந்தது. உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின் பொதுமக்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்பட்டது.